18 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.



Coimbatore: கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் திருநெறிய தீந்தழிம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழா கடந்த 9ம் தேதி காலை 6 மணிக்கு முகூர்த்தக்கால் அமைத்து தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. 17ம் தேதி ஸ்ரீ சித்தம்மாள் திருக்கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டன. அதே நாள் மாலை ஊர் முழுவதிலும் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைபாலிகைகள் அழைத்து வந்தனர். மாலையில் ஓயிலாட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



18ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண்ணெடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு ஆகியவை அடங்கும். அன்று மாலை முதற்கால வேள்வி, இரவு விமான கலசம் நிறுவுதல், மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

19ம் தேதி மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், இரண்டாம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு, திருக்கோவிலை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கெளமார மரபு தண்டபாணி சுவாமிகள் வழி வழி சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கோவில் கோபுரத்திற்கு திருக்குடங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. பின்னர் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மாரியம்மனுக்கு அலங்கார மற்றும் அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன.

இந்த விழாவில் அப்பநாயக்கன்பாளையம், துடியலூர், பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...