ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கின. முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் இன்று துவங்கின. இப்பணிகளை மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பாபு, உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன், உடுமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம், ரெட்டியபாளையம் ஊர்த் தலைவர் மோகன், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் ஊர்த் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் திமுக கிளைச் செயலாளர் ஜெயக்குமார், கிளை துணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகளான மயில்சாமி, ரவி, ராம்ராஜ், ராஜ் (எ) கருப்புசாமி, தங்கவேல், லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கோவில் சீரமைப்பு பணிகள் மூலம் பழமையான இக்கோவிலின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிறந்த வழிபாட்டு சூழல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...