வேளாண்காடு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி: கோவையில் நடைபெறுகிறது

கோவையில் இந்திய காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டத்தின் (TOFI) கீழ் வேளாண்காடு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி ஆகஸ்ட் 25, 2024 அன்று நடைபெறுகிறது. விவசாயிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.



கோவை: இந்திய காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டம் (TOFI) என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் வேளாண்காடு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி திட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் விருப்பமுள்ள அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TOFI திட்டம் அமெரிக்க பன்னாட்டு வளர்ச்சி முகமை (USAID) மற்றும் இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு ஐந்தாண்டு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சியில் வேளாண் காடுகள் அறிமுகம், மர இனங்களின் தகவல்கள் (பிராந்தியம் சார்ந்த), மற்றும் TOFI திட்டத்தின் கண்ணோட்டம் ஆகிய தலைப்புகள் உள்ளடங்கும்.

பயிற்சி ஆகஸ்ட் 25, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு REDWOODS இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெறும். பண்ணை முகவரி: 2/453, வீரபாண்டிபுதூர் சாலை, தடாகம் காவல் நிலையம் அருகில், சின்னத் தடாகம், கோயம்புத்தூர்-641108.

பயிற்சியின் முதன்மை பயிற்சியாளராக டாக்டர் சி.ஆர். ஜெயப்பிரகாஷ் இருப்பார். மேலும் விவரங்களுக்கு அவரை 98942 59100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் https://docs.google.com/forms/ என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். TOFI திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு TOFI மாவட்டக் குழுவை 80757 83478 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...