பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக 12 திமுக கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வார்டுகள் கொண்ட கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேரூராட்சியில் ஒப்பந்தம் மற்றும் டெண்டர் முறைகேடுகள், வரவு செலவு கணக்குகளை சரியாக சமர்ப்பிக்காதது போன்ற பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.



கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய கவுன்சிலர்கள், திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களே தங்கள் கட்சி தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...