பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக 12 திமுக கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வார்டுகள் கொண்ட கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேரூராட்சியில் ஒப்பந்தம் மற்றும் டெண்டர் முறைகேடுகள், வரவு செலவு கணக்குகளை சரியாக சமர்ப்பிக்காதது போன்ற பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.



கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய கவுன்சிலர்கள், திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களே தங்கள் கட்சி தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...