தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மாயம்..!

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 7 மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு மாதிரி பள்ளி மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் கீழ், குண்டடம் மாதிரி பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் சுதந்திர தின விழா விடுமுறையை கொண்டாட குளிக்கச் சென்றனர். இவர்களில் டேவிட், அசப் சாமுவேல், ஸ்டீவ் டேனியல், கலாப், டெவின் ரோஜர், நித்தீஸ் குமார் மற்றும் ஜெரோமியா ஆகியோர் அடங்குவர்.



எதிர்பாராத விதமாக, 16 வயதான ஜெரோமியா (ராஜகோபாலின் மகன்) என்ற மாணவன் மட்டும் நீரில் மூழ்கி காணாமல் போனார். மற்ற 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...