பொள்ளாச்சியில் 78வது சுதந்திர தின விழா: நகராட்சி தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் கொடி வணக்கம் பாடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.



மேலும், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக பொள்ளாச்சி நகராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே விரைந்து தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் கணேசன், துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் வாக்கி டாக்கிகளை வழங்கி புதிய தொடர்பு முறையை தொடங்கி வைத்தனர். இந்த சுதந்திர தின விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...