78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் 110 காலால்படை பட்டாலியன் நடத்திய திரங்கா பைக் பேரணி

கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை 2 இன் சி கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். இவர்கள் 110 காலால் பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் வளாகத்தில் இருந்து புறப்பட்டு ரெட் பீல்ட்ஸ் சாலை, ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.



பேரணியில் இருசக்கர வாகனங்களுக்கு பின்னால் ராணுவ வாகனம் ஒன்றும் சென்றது. அந்த வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்தன. மேலும், ஒலிபெருக்கி மூலம் தேசப்பற்று பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.



இந்த திரங்கா பைக் பேரணி மூலம் மக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதும், 78-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிப்பதும் நோக்கமாக இருந்தது. பேரணியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...