கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் போஸ்டர்கள்: மீண்டும் மோதல் சூழல்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள் மாறி மாறி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டு சிறைக்குச் செல்லும் அளவிற்கு நிலைமை உருவானது.

இதனைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேம்பாலச் சுவர்களில் கோவை மாநகரைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், இயற்கை ஓவியங்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு வரையச் செய்தது. மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அரசியல் கட்சியினர் இடையே சமரசமான சூழ்நிலை உருவானது.



ஆனால், தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு மீண்டும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மோதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...