உடுமலை அருகே அரசு துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 சதவீதம் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

உடுமலை இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கூட்டத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.



விஜயா தனது உரையில், தமிழக அரசின் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றைப் பற்றியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தாரணி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடையே நல்லுறவை மேம்படுத்துவதாகக் கூறினார்.

கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி ஆகியவை பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.



இக்கூட்டத்தில், புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கீதா தலைவராகவும், பிரியா துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர், முன்னாள் மாணவர்கள் உட்பட மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் இறுதியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோணீஷ்வரி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...