உடுமலை அருகே பெரிய வாளவாடி குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு - விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார்

உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியின் சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு குளம், குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் களி மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, விவசாயிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்து தாசில்தார் அளவில் அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஒரு அமைப்பைச் சேர்ந்த சில விவசாயிகள் இடையூறு விளைவித்து வருவதாகவும், பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதுடன், வண்டல் மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட டிராக்டர், லாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றுக்கு வாடகை கொடுத்து நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விவகாரம் தொடர்பாக ஒன்று திரண்ட விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது விவசாயிகள், "பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குட்டையில் வண்டல்மண் அள்ளும் பணியை ஒரு சிலர் சுய லாபத்திற்காக தடுத்து இடையூறு செய்து வருகின்றனர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லை என்றால் வாளவாடி பகுதியில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...