உடுமலையில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதியில், குடிபோதையில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் வேடப்பட்டி பகுதியில் நடந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதியில், குடிபோதையில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) என்பவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், சரஸ்வதியை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முயற்சித்தார்.

இதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் முரண்பட்டு பேசினார். இதையடுத்து, சரஸ்வதி மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சண்முகசுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் சண்முகசுந்தரம் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...