பொள்ளாச்சியில் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகில் திமுக நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு. கண்ணப்பன், கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, கழக செயல்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சியாமளா, வழக்கறிஞர் அணி தலைவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதேபோல், அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இங்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கும், அவரது நினைவுச் சின்னமான பேனாவிற்கும் மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் அரசியல் பங்களிப்பையும், சமூக சேவையையும் நினைவு கூர்ந்து பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...