உடுமலை அருகே ஆலங்குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே ஜல்லிபட்டி ஊராட்சியில் உள்ள ஆலங்குளம் புதர் மண்டி காணப்படுவதால், குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிபட்டி ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆலங்குளம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால், தற்போது புதர் மண்டி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜல்லிப்பட்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்களுக்கு இந்த குளம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் மழைக்காலத்தில் ஏற்படும் நீர்வரத்தை தேக்கி வைக்கும் வகையில் குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி பராமரிப்பு செய்வதில் திமுக ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதன் காரணமாக மழைநீர் யாருக்கும் எந்தவித பயனும் இல்லாமல் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்திற்கு நீர்வரத்தை அதிகரிக்கும் பொருட்டு, நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்றி, குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்றும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...