பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டம்: தனியார்மயக் கொள்கையை கைவிட வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசின் தனியார்மயக் கொள்கையால் கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று எச்சரித்து, அக்கொள்கையை கைவிட வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செப்டம்பர் 17ஆம் தேதி சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதாகவும், அதனை ஒன்பதாவது மாநில பிரதிநிதித்துவ பேரவை சிறப்பு மாநில மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழக அரசின் தவறான தனியார்மயக் கொள்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் சுங்க வசூலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 3,500 சாலைப் பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.



"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்" என்று அம்சராஜ் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் சாலைப் பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அம்சராஜ் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...