கோவையில் முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகள்: 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. 6 முதல் 18 வயது வரையிலான பிரிவுகளில் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து முதலாம் ஆண்டு சிலம்பம் போட்டிகளை நடத்தின.

இந்த போட்டிகள் 6 வயது முதல் 8 வயது வரை, 8 வயது முதல் 12 வயது வரை, 12 வயது முதல் 14 வயது வரை மற்றும் 14 வயது முதல் 18 வயது வரை என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. ஒத்தகம்பு, இரட்டை கம்பு, வேல்கம்பு, வாள், சுருள்வாள் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.



போட்டிகளின் தொடக்க விழாவில் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக உயர்நீதி மன்ற மதுரை கிளை சட்டப்பிரிவு துணை ஆணையர் அறிவழகன், சேலம் உளவுத்துறை துணை ஆணையர் சிந்துஜா ஆகியோர் கலந்துக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம் மணி, தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் நிறுவனர் ஆசான் குமார், கேரளா மாமாங்கம் களரி கேந்ரா நிறுவனர் ஆசான் சுலைம், தமிழரின் சிலம்பம் கலைக்கூடம் மதுசூதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக சிலம்பம் விளையாட்டு சங்க ஊட்டி தலைவர் ஆல்பட் சிறப்புரை வழங்கினார்.

இந்த போட்டிகளுக்கு கிருஷ்ணன், கோபால், ரங்கசாமி, ராமபாலன், ஆனந்தகுமார், முத்துபாண்டி, ரேமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். கோவையில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிலம்ப பயிற்சி மையங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் நன்றி கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...