கற்பகம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் தர குறியீடுகள் கருத்தரங்கு

கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி "செவிலியர் தர குறியீடுகள்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரி சார்பில் "செவிலியர் தர குறியீடுகள்" (Quality Indicators in Nursing) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி நடைபெற்றது.



தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் (DMChO) விஜயலட்சுமி, கற்பகம் கல்லூரியின் தலைவர் டாக்டர் ரா. வசந்த குமார், Chairman and Managing Trustee முருகய்யா, CEO வெங்கடேசன், Medical Director மற்றும் கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சுதா சிறப்பு கண்காணிப்பாளராக பங்கேற்றார்.



தொடர்ந்து, ஏழு சிறப்பு பேச்சாளர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இடையில் அறிவியல் சுவரொட்டி மற்றும் அறிவியல் காகித விளக்கக் காட்சியை சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்தனர். மொத்தம் 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் முடிவில், கலந்து கொண்டு சிறப்பித்த பேச்சாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணியளவில் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...