பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை, பொள்ளாச்சி உட்கோட்டம் காவல்துறை மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், NIA கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராசன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



முன்னாள் மாவட்ட முதன்மை போக்குவரத்து காப்பாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு, விபத்து எவ்வாறு நடக்கிறது, விபத்தை எப்படி தவிர்க்கலாம் போன்ற தகவல்களை வீடியோ மூலம் காண்பித்து விளக்கமளித்தார். சாலை விபத்துகளில் 20 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முகாமில், மாணவ மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல், சிக்னல்களை மதித்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், கட்டாயமாக ஹெல்மெட் அணிதல் போன்ற முக்கிய விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...