ஆடி அமாவாசைக்கு கோவை-ராமேஸ்வரம் இடையே சிறப்பு பேருந்து சேவை: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

ஆடி அமாவாசை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



கோவை: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை மற்றும் ராமேஸ்வரம் இடையே சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆடி அமாவாசை தினம்) பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் சனிக்கிழமை அன்று சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், அடுத்த நாள் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் பெங்களூருக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது தொலைதூர பயணங்களுக்கு https://tnstc.in இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யுமாறு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...