கோவையில் SDTU மண்டல மாநாடு: பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க வலியுறுத்தல்

கோவையில் செப்டம்பர் 22 அன்று SDTU மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் திரும்பப்பெறுதல், பொதுத்துறை நிறுவனங்கள் மீட்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.



Coimbatore: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பில் கோவையில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் லோகோ வெளியீட்டு விழா கோவை மாவட்ட SDPI அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகளாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை மீட்டு அரசே நடத்துதல், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 6 அம்சங்கள் அடங்கும். இந்த மாநாடு செப்டம்பர் 22 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

ரவூப்நிஸ்தார் பேசுகையில், "மோடி அரசு தொழிலாளர் விரோத போக்குடன் பல சட்டங்களை திருத்தியுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

மேலும், "தமிழகத்தில் 56 இடங்களில் SEZ அமைக்கப்பட்டுள்ளது. இவை தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும், இயற்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் கோவை மண்டலத்தின் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பேசுகையில், "முந்தைய அரசுகள் 360 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கின. ஆனால் தற்போதைய அரசு 60 நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்காமல் புதியவற்றை உருவாக்க வேண்டும்," என்றார்.

வேலையில்லா பிரச்சினை குறித்து, "CMIE அறிக்கையின்படி 48% இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கக் கூடாது," என்று வலியுறுத்தினார்.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.

மாநாட்டில் 4000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...