வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை கட்டும் குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என உறுதியளித்தார்.


Coimbatore: வீட்டு வசதித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். வால்பாறையில் நிலச்சரிவால் வீடு இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி ஜனப்பிரியா குடும்பத்திற்கும், பொள்ளாச்சி திப்பம்பட்டியில் வீடு இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதன் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர்களிடம் உறுதி பெற்றே பணிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.



திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 60 இடங்களில் வீட்டு வசதித் துறை சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள மோசமான நிலையில் இருந்த கட்டிடங்களில் 90 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டி அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...