கேரள வெள்ளப் பாதிப்பு: கோவை மாநகராட்சி மீட்பு உபகரணங்களை அனுப்பி வைத்தது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் மீட்பு வாகனங்கள் மற்றும் குளிர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.


Coimbatore: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயமுத்தூர் மாவட்டத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில், மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகளை (Freezer Box) மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் நேற்று (30.07.2024) நள்ளிரவு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, துணை ஆணையர் க. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சபரி ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாபு, அஸ்லாம் பாஷா, இளஞ்சேகரன், ராஜலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த முயற்சி கேரளாவின் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் இந்த உதவி, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...