கோவை சுங்கம் பைபாஸில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த லாரி ஓட்டுநர் கைது

கோவை சுங்கம் பைபாஸில் போலீஸ் வாகன சோதனையின் போது, குடிபோதையில் வந்த லாரி ஓட்டுநர் முகமது நஸ்ருதீன் போலீசாருடன் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஜூலை 29 அன்று நடந்தது.


கோவை: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே ஜூலை 29 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.

இந்நிலையில், உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீசார் சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது நஸ்ருதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக தேவகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், தண்ணீர் லாரி ஓட்டுநரான முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...