உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்தனர். முறைகேடு புகார்களை அடுத்து நடந்த இந்த போராட்டத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும், சார்பதிவாளர் தாமோதரன் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் குடும்பத்தினரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சார்பதிவாளரை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட அதிகாரிகள், கணியூர் சார்பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தால் உடுமலை அருகே கணியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...