நீலிகோணாம்பாளையம் அருகே இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இருவர் கைது

கோவை நீலிகோணாம்பாளையம் அருகே, முன்விரோதம் காரணமாக 18 வயது இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இரு நபர்கள் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தராஜின் மகன் கார்த்திகேயன் (18), அப்பகுதியில் உள்ள சரோஜினி ரோட்டில் இருமொழி வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கார்த்திகேயனுக்கும் சிபு (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூலை 26 அன்று கார்த்திகேயன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிபு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திகேயனை தாக்கியவர்கள் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்த சிபு (30) மற்றும் நீலிகோணாம்பாளையத்தைச் சேர்ந்த ரெஷித் (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இருவரையும் ஜூலை 28 அன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...