கோவை வில்வித்தை வீராங்கனைக்கு சர்வதேச தர உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை தங்கை கண்மணிக்கு ரூ.2.08 லட்சம் மதிப்பிலான சர்வதேச தர உபகரணங்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இந்த உபகரணங்கள் உதவும்.


விளையாட்டுத்துறையில் திறமையும், ஆர்வமும் கொண்ட வீரர் - வீராங்கனையரின் கனவுகள் நனவாக, தமிழ்நாடு அரசு துணை நின்று வருகிறது என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை தங்கை கண்மணி, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கிற வகையில் பயிற்சிகளை மேற்கொள்ள, ரூ.2.08 லட்சம் மதிப்பில் சர்வதேச தரத்திலான வில்வித்தை உபகரணங்களை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

வில்வித்தை போட்டிகளில் தங்கை கண்மணி வெற்றிகளையும் - பதக்கங்களையும் குவிக்க வாழ்த்தி மகிழ்ந்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த உதவி மூலம் தங்கை கண்மணி சர்வதேச அளவில் சிறந்த செயல்திறனைக் காட்டி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...