மருத்துவர் பற்றாக்குறை: நவீன தொழில்நுட்பத்தின் தேவையை வலியுறுத்தும் டாடா குழும தலைவர்

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இந்தியாவின் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் சுகாதார சேவை சவால்கள் குறித்து பேசினார். நவீன தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தினார்.


Coimbatore: டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி. கேன்சர் ஆராய்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் போது, இந்தியாவின் சுகாதாரத் துறையில் உள்ள சவால்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.


நடராஜன் சந்திரசேகரன் கூறியதாவது: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் மிகவும் பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. மேலும், மருத்துவர்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில் குவிந்துள்ளனர், ஆனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்."


"வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை மருத்துவ சேவைகளைப் பெற மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 5,00,000 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தலையீடு மிகவும் அவசியமாகிறது," என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், "ஜப்பான் போன்ற நாடுகள் மூளை முடக்குவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளமான வாழ்க்கையை வழங்க ஆய்வுகள் நடத்தி வருகின்றன," என்றார்.


சர்க்கரை நோய் பாதிப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "2010-ல் 50 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 75 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது விரைவில் 100 மில்லியனை எட்டக்கூடும். எனவே, புதிய மருத்துவ முறைகள் அவசியம்," என்று அவர் கூறினார்.


"இந்தியாவில் பல்வேறு நோய்கள் காணப்படுவதால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயனளிக்கும்," என்று நடராஜன் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...