பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட் எதிர்ப்பு: காதில் பூ அணிந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நூதன போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காதில் பூ அணிந்து நூதன முறையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நாமம் போட்ட பதாகைகளை ஏந்தியவாறும், காதில் பூவை சுற்றிக் கொண்டும் நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.



போராட்டக்காரர்கள் "தமிழ்நாட்டுக்கு கோவிந்தா, பாஜகவுக்கு கோவிந்தா, தமிழ்நாடு திட்டங்களுக்கு கோவிந்தா" என்ற கோஷங்களை எழுப்பினர்.



இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...