ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வு மற்றும் மக்களை ஏமாற்றும் திட்டம் என குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், "திராவிட மாடல் அரசு இலவச வீடு திட்டம் போல ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது" என்று குற்றம்சாட்டினார். மேலும், இத்திட்டத்தில் ஒரு சதுர அடிக்கான அனுமதி கட்டணம் ₹44லிருந்து ₹88 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவை சிதைக்கும் செயல் என்றும் கூறினார்.



அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மேலும் தொடர்ந்து, "இந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த தர்ணா போராட்டம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...