கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

கோவை குனியமுத்தூரில் சாலைகள் சேதம், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம். பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு.


கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாலக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 87வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர், வசந்தம் நகர், பி.கே.ஜி நகர் உட்பட வஹாப் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், குடிநீர் விநியோகமும் சரிவர கிடைக்கவில்லை என்றும், வரக்கூடிய குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.



இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த 87வது வார்டு திமுக கவுன்சிலர் பாபுவிடம் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை என்றும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த பலனும் இல்லாததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.



சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை என்றும், வழுக்கி விழுந்து அடிபடுவதாகவும் பொதுமக்கள் கூறினர். மேலும், மக்களிடம் வாக்கு பெற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என்று யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதற்கும் மாநகராட்சி ஊழியர்கள் வராததால் வீடுகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், மழைக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகளை செய்துதராத கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...