பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை: கோவையில் கல்லூரி மாணவர் கைது

கோவை குனியமுத்தூரில் பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த சம்பவம் வீதியில் தொல்லையாக மாறியது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவி சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. மாணவியும் அந்த பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்.

பெண் என நினைத்து மாணவி அவருடன் பழகி வந்தார். அந்த நபர் பெண்ணின் குரலில் பேசி பழகியதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர், அவர் தான் பெண் இல்லை என்றும் தனது பெயர் ஜூனைத் (வயது 22) என்றும் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் ஜூனைத் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். மாணவி பள்ளி செல்லும் வழியிலும், பல்வேறு இடங்களிலும் நின்று கொண்டு தொந்தரவு கொடுத்தார்.

சமீபத்தில், ஜூனைத் மாணவியின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, மாணவியின் தந்தை அவரை சந்தித்தார். ஜூனைத் அங்கிருந்து தப்பி ஓடும்போது அவரது செல்போன் கீழே விழுந்தது. அதில் மாணவியின் புகைப்படம் இருந்ததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேட்டபோது, ஜூனைத் தந்தைக்கு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜூனைத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...