பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை: கோவையில் கல்லூரி மாணவர் கைது

கோவை குனியமுத்தூரில் பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த சம்பவம் வீதியில் தொல்லையாக மாறியது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவி சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. மாணவியும் அந்த பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்.

பெண் என நினைத்து மாணவி அவருடன் பழகி வந்தார். அந்த நபர் பெண்ணின் குரலில் பேசி பழகியதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர், அவர் தான் பெண் இல்லை என்றும் தனது பெயர் ஜூனைத் (வயது 22) என்றும் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் ஜூனைத் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். மாணவி பள்ளி செல்லும் வழியிலும், பல்வேறு இடங்களிலும் நின்று கொண்டு தொந்தரவு கொடுத்தார்.

சமீபத்தில், ஜூனைத் மாணவியின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, மாணவியின் தந்தை அவரை சந்தித்தார். ஜூனைத் அங்கிருந்து தப்பி ஓடும்போது அவரது செல்போன் கீழே விழுந்தது. அதில் மாணவியின் புகைப்படம் இருந்ததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேட்டபோது, ஜூனைத் தந்தைக்கு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜூனைத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...