கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டில் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கோவை கருமத்தம்பட்டி அருகே சென்னப்ப செட்டிபுதூரில் வீட்டில் தீ விபத்து. சமையல் அறையில் 37 வயது ஆண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு. மதுபோதையில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்.


Coimbatore: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் நேற்று இரவு நடந்த தீ விபத்தில் ஒரு ஆணின் கருகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சகாய ஜெகன்ராஜ் (37) என்பவர் தனது மனைவியுடன் சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெகன்ராஜ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததால், மனமுடைந்த மனைவி சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

நேற்று ஜூலை 24 இரவு 10 மணிக்கு அளவில், ஜெகன்ராஜின் வீட்டில் இருந்து தீப்புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜெகன்ராஜ் சமையல் அறையில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெகன்ராஜ் மதுபோதையில் வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், ஜெகன்ராஜ் தற்கொலை செய்தாரா அல்லது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...