சூலூர் பகுதியில் 460 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

கோவை மாவட்டம் சூலூரில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் 460 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, இரண்டு நபர்களைக் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சூலூர் பகுதியில் பெரும் அளவிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

24.07.2024 அன்று, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சூலூர் காவல் நிலைய அதிகாரிகள் பாப்பம்பட்டி அருகே சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் சிவசுப்பிரமணியம் மற்றும் தங்கப்பாண்டி மகன் முருகராஜ் ஆகியோர் ஒரு வாடகை வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைதான நபர்களிடமிருந்து மொத்தம் 460 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் 3,03,169/- என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...