கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 24 அன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையை பாராட்டியும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Coimbatore: கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 24 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி திமுக குழுத் தலைவர் இரா.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச் செல்வன், கொறடா ஆர்.பத்மாவதி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையின் கீழ் கட்சி பெற்ற வெற்றிகளை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை வன்மையாக கண்டித்தனர். பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ இரயில் திட்டம் போன்றவற்றிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.



"தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது," என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...