மத்திய பட்ஜெட் சிறப்பானது - கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) செய்தியாளர் சந்திப்பில், மத்திய பட்ஜெட் குறித்த கருத்துக்களை பகிர்ந்தனர். இரும்பு, காப்பர் கழிவுகள் மற்றும் தங்கம் மீதான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்களை வரவேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் CII கோவை மாவட்ட சேர்மன் ராதாகிருஷ்ணன் பேசினார்.



கோவையைப் பொறுத்தவரை, மத்திய பட்ஜெட்டில் இரும்பு கழிவுகளுக்கான (ferrous scrap) இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்கியுள்ளது கோவை நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், காப்பர் கழிவுகளுக்கான (copper scrap) இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் காப்பர் கச்சா பொருட்களின் விலை குறையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கத்திற்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது தங்க நகை உற்பத்தியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும். முத்ரா கடன் தொகை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த பட்ஜெடாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் பாராட்டினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...