மின்கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், கேஆர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையின் முக்கிய பகுதிகளில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கேஆர் ஜெயராமன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருப்புநிற ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.



தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள், மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படாததை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், "இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மின் கட்டண உயர்வு, சாமானியர்கள் முதல் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.

மேலும் அவர், "தீபாவளிக்கு போனஸ் அறிவிப்பது போல, திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று முறை மின் கட்டண உயர்வை போனஸாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது ஏன் இந்த மின்சார கட்டண உயர்வு வெளியாகவில்லை? தமிழகத்தில் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 20,000 ரூபாய் இருந்தால் மட்டுமே பாமர மக்களால் வாழ்க்கை நடத்த முடியும் என்ற சூழலை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

போக்குவரத்து துறை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள், உரிய பகுதிகளை பார்த்து பயணிக்க முடியாத வகையில், நகர பேருந்துகளில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. இருந்தும் அமைச்சர் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்கிறார். இன்னும் பத்து நாட்களில் போக்குவரத்து கட்டணத்தையும் உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

நியாயவிலைக் கடைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது," என்றார்.

முடிவில், "2006 காலகட்டத்தில் இதே சூழல் நிலவியது, அதன் பின்னர் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. அப்போது அத்தனை தொழிலதிபர்களும் தமிழ்நாட்டை நோக்கி வந்தார்கள். ஆனால் தற்பொழுது தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்கள் வேறு மாநிலத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். மின்சார கட்டணமே இந்த நிலைக்குக் காரணம்," என்று அவர் குறிப்பிட்டார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...