கோவை மேற்கு புறவழிச்சாலை: இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு - அனுமதிக்காக காத்திருப்பு

கோவை மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் இப்பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் தொடங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் முடியும் வகையில் 32.43 கி.மீ நீளத்திற்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை 15 வருவாய் கிராமங்கள் வழியாக செல்லும்.

முதல் கட்டமாக 11.80 கி.மீ தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 5 கி.மீ தூரத்திற்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, 2 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டமாக 12.10 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய கிராமங்களில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும், சோமையம்பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக 8.52 கி.மீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் சாலை அமைக்க ரூ.300 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற ஆறு மாதங்கள் ஆகலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டப் பணிகள் முடிவதற்குள் இரண்டாவது கட்டத்திற்கான பூர்வாங்க வேலைகளை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...