திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்பூரில் மூலிக்குளம் வழங்குவாய்க்கால் தூர்வாரும் பணி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் உதவியுடன் தொடங்கியது. இது நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் வழங்குவாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த வாய்க்காலை வேர்கள் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் இருந்து மூலிக்குளம் வரை செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிதி உதவியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் (TEA) அறக்கட்டளை வழங்குகிறது. இந்த வாய்க்கால் திருப்பூர் நகரத்தின் மைய பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கி, பளையக்காடு, கருமாரபாளையம், மண்ணரை வழியாக மூலிக்குளத்தை அடைகிறது.



இந்த தூர்வாரும் பணியால், நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் குளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்பணியின் தொடக்க விழா ஜூலை 21, 2024 அன்று காலை 9.30 மணிக்கு அணைக்காடு Check dam பகுதியில் நடைபெற்றது.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் K.M சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இப்பணிக்கு உதவி கோரியபோது, உடனடியாக ஒப்புதல் அளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் K.M சுப்பிரமணியம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...