உடுமலையில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: வனத்துறையினர் மீட்பு

உடுமலை நேரு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய விவசாயியின் இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்துள்ளது. வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையான நேரு வீதியில் தனியார் மருத்துவமனை, அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பரபரப்பான பகுதியில், ஒரு விவசாயி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

சிகிச்சை முடிந்து திரும்பும் போது, அவரது இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.



வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை மீட்க வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடினர்.



இறுதியில் மீட்கப்பட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பை அடர்ந்த வனப் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

தற்போது பருவ மழைக்காலம் என்பதால், சாலையின் இரு ஓரங்களிலும் பூக்கள் மற்றும் செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதனால் பாம்பு மற்றும் தேள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் புதர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், வாகனங்களை இயக்கும் முன்பு கவனமாக பரிசோதித்து விட்டு பயணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...