கோவையில் நவம்பரில் நடைபெறவுள்ள உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக்

கோவையில் நவம்பர் 20 முதல் 30 வரை உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.


கோவை: ஐ.எச்.ஸ் (Indigenous Horse Society) - தமிழ் நாடு அமைப்பின் சார்பில் கோவையில், வரும் நவம்பர் மாதத்தில் உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியிட்டு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (20.07.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐ.எச்.ஸ் - தமிழ் நாடு மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், 'எக்ஸ்போ வெண்' குழுமத்தின் தலைவர் மஹேந்திரன், நடிகர் பிரசாந்த், SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், எமரால்டு குழுமத்தின் இயக்குனர் நிஷ்டா ஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஐ.எச்.ஸ் அமைப்பின் தென் இந்திய கன்வீனர் நவநீத் ராஜ் மற்றும் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் கலந்து கொண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த 2 போட்டிகளுக்கான லோகோவை வெளியிட்டனர்.

இந்த போட்டிகள் வரும் நவம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ளது.

உலகில் முதல் முறையாக IPL/TNPL போல இந்த போலோ பிரிமியர் லீக் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை முன்னிறுத்தி, Kovai Canter Kings(கோவை), Salem Saddle Soldiers (சேலம்), Madurai Mallet Magicians (மதுரை), Horseplay Soldiers Nellai(நெல்லை), Trichy Turf Torpedoes (திருச்சி), Chennai Champions (சென்னை) என மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.



குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளனர். இது ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. மேலும், இந்த 2 நிகழ்வுகளும் சர்வதேச தரத்தில் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளை மதிப்பீடு செய்ய நிபுணத்துவம் மிக்க நடுவர் குழு அமைக்கப்படும் என்றும் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் பரிசு தொகை உண்டு என்றும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் காண்பதோடு, பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களிலும், OTT தளங்களிலும், ரேடியோ மூலமாகவும் பார்க்க, கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...