கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இதனை தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


கோவை: கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஜூலை 20 அன்று நடைபெற்றது. இந்த முகாமை கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவர் பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



ஹிந்துஸ்தான் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இந்த மருத்துவ முகாமில் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது போன்ற மருத்துவ முகாம்கள் பத்திரிகையாளர்களின் உடல்நலனை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...