கோவை மாநகராட்சி 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன

கோவை மாநகராட்சி 1வது வார்டில் தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை பணி ஆய்வு, மழைநீர் வடிகால் சுத்தம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன.


கோவை: கோவை மாநகராட்சியின் 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பராமரிக்கும் பணி நடைபெற்றது.



வசுத்தரா நகரில் பாதாள சாக்கடை பணி தொடங்குவதற்காக ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அப்பகுதியை ஆய்வு செய்தார்.



லவ்லி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



லவ்லி நகர், ராஜூ கார்டன் மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.



கலைஞர் நகரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கேப் டவுன் பகுதியில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...