கோவை வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்பு

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, 90வது வார்டு வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கடையை திறந்து வைத்தனர்.


Coimbatore: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைப்புதூர் 90வது வார்டில் உள்ள வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.

புதிய நியாய விலைக் கடையை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியுடன் இணைந்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று (ஜூலை 19) திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் மூ.ராஜேந்திரன், கழகத் தீர்மான குழு இணை செயலாளர் மு.முத்துசாமி, வட்ட கழக செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



இந்த புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா, வைகை நகர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசிய பொருட்களை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...