உடுமலை அருகே திருமூர்த்திமலையில் வெள்ளம் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும், வெள்ள பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த ஒத்திகை பயிற்சியில் கோவில் செயல் அலுவலர் அமரநாதன், கோவில் ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தத்ரூபமாக இருந்ததால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது. பின்னர் இது ஒத்திகை பயிற்சி என்று தெரிந்ததும் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த பயிற்சி மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...