கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.


கோவை: கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளைக் கண்டித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.





31.10.2023 அன்று பொதுமக்கள் பயன்படுத்தும் புல எண் 37/3ல் உள்ள நத்தம் காலியிடத்தில் கற்கள் இட்டும், சுவர் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி (W.P.No. 28218/2021) காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஆக்கிரமிப்பு அளந்து எல்லைக்கல் இடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால், ஆக்கிரமிப்பு செய்த நபர் அந்த காலியிடம் தனக்கு சொந்தமானது என கூறி, பொதுமக்கள் பயன்படுத்தினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல் செய்து பேனர் வைத்துள்ளார். இது பொதுப்பாதையை பயன்படுத்தும் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.

05.07.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்பை முழுமையாக விரைவில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருக்குமரன் நகர், விஐபி நகர், மற்றும் சீனிவாசா நகர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி பயன்படும் வகையில், சரியான முறையில் அளந்து எல்லைக்கல் இட்டு ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...