பொள்ளாச்சியில் சாலை விபத்தில் நீதிபதி உயிரிழப்பு: CCTV காட்சிகள் வெளியீடு

பொள்ளாச்சி உடுமலை சாலையில் நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாம்பாளையம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையின் முடிவில், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கஞ்சம்பட்டி கே. நாகூரைச் சேர்ந்த வஞ்சிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்காட்சிகளில், நீதிபதி கருணாநிதி சாலையைக் கடந்து வருவதும், வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதுவதும், அவர் நிலைதடுமாறி கீழே விழுவதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய வஞ்சிமுத்து, தனது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...