காங்கேயம் அருகே கார் விபத்து: அமைச்சர் உறவினர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் கார் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து. அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் ஜெகன் பிரகதீஷ் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம் அருகே முத்தூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜெகன் பிரகதீஷ் (23), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார். நள்ளிரவில் முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஓட்டிச் சென்ற ஜெகன் பிரகதீஷ், பாப்பினி அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.



விபத்தில் படுகாயமடைந்த ஜெகன் பிரகதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த ஜெகன் பிரகதீஷ், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் அண்ணன் மகன் என்பதும், அவரது குடும்பத்தின் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...