கோவை மாவட்ட 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி: நா.கார்த்திக் எம்எல்ஏ பங்கேற்பு

கோவை உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் திடலில் 75வது மாவட்ட பளுதூக்கும் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு அரசியல் பிரமுகர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (ஜூலை 14) உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் திருக்கோவில் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்கம் மற்றும் உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அவர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பீளமேடு பகுதி-3 செயலாளர் இரா.சேரலாதன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், கீதா சேரலாதன் எம்சி, உ.க.ராமசாமி, இரா.செந்தில், அறங்காவலர் வசந்த குமார், நாகேஸ்வரன், ICF கோபாலகிருஷ்ணன், ரங்கநாதன், டிஸ்கோ காஜா, எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர். பல உடற்பயிற்சி வீரர்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...