பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வனத்துறை அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அருவியில் குளிப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் ஆழியார் கவியருவிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.



இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 7:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்து குவிந்தனர். வனத்துறை அதிகாரிகளும் வழக்கம் போல சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதித்தனர்.



எனினும், சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, காலை 9 மணி அளவில் திடீரென கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியிலிருந்து அதிக அளவில் நீர் கொட்டத் தொடங்கியதை அடுத்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை அவசரமாக வெளியேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆழியார் கவியருவியை தற்காலிகமாக மூடியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...