உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்

உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஓபிஎஸ்-ஐ அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை 'துரோகி' என்றும் 'பச்சை துரோகி' என்றும் அவரது புகழுக்கும் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் வகையில் தினமும் உள்நோக்கத்துடன் ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், இதனால் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு வழங்கும்போது தொகுதி செயலாளர் லட்சுமணன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றியம் அவைத்தலைவர் சிவன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மணி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, உடுமலை மேற்கு ஒன்றிய வர்த்தக செயலாளர் கண்ணன், உடுமலை வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் அரி முருகன், கிளைச் செயலாளர்கள் பழனிச்சாமி, மாசிலாமணி, நாட்ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...