காங்கேயம் காடையூர் காடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள காடையீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர் முதல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வரை பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ பங்கசாட்சி உடனமர் ஸ்ரீ காடேஸ்வரப் பெருமான், காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ கருணாகர பெருமாள், ஸ்ரீ வெள்ளையம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.



கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. புனித நீர் கலசங்களுக்கும் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆன்மிகவாதிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை, ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமாளின் அருளைப் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவில் விழா கமிட்டியின் மூலம் உணவு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...